Wednesday 7 July, 2010

ஆறாம் திருமுறை அமுது

1. பரசிவ வணக்கம் ( 3269 )
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே

2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
( 3270 )
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்