Monday 15 February, 2010


வள்ளல் வகுத்து தந்த வாழ்வியல் முறைகள்
வெந்நீர் பயன்பாடு
வள்ளலாரின் வாழ்வியல் முறைகளில் முக்கியமானது சன்மார்கர்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரை பயன்படுத்த சொன்னது ...
இன்று உலகில் ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று, ஆகாயம் என்று நான்கு பூதங்களும் மனிதர்களால் மாசுபடுதப்பட்டுள்ளது..மாசுபடுத்த முடியாத ஒரே பூதம் நெருப்பு மட்டுமே..நிலம், காற்று, ஆகாயம், ஆகியவற்றில் எது ஒன்று மாசு அடைந்தாலும் முதலில் கெடுவது நீர் மட்டுமே..அதனால் தான் உலகில் எழுபத்தைந்து சதவிகிதம் நோய்கள் (Water Borne Disease )தண்ணீரால் பரவுகிறது .நிலம்,நீர், காற்று,ஆகாயம் ,ஆகிவற்றின் அசுத்தங்களை சுத்தபடுத்தக்குடிய ஒரே சக்தி நெருப்புக்கு மட்டுமே உண்டு.. குறிப்பிட்ட அளவு வெப்ப நிலைக்கு மேல் நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட நீரில் எல்லா நோய் கிருமிகளும் அழிந்து விடுவதால் நாம் அதை குடிநீராக பயன்படுத்தும்போது நோய் தொற்று வராமல் நம்மை காத்து கொள்ள முடிகிறது.

வெந்நீர்குளியல்
வெந்நீரில் குளித்தால் நமது தேகத்திற்கு ஐம்பூதங்களையும் கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வந்து விடுகிறது.உதாரனத்திற்க்கு காம இச்சை உணர்வுகளில் இருந்து நம்மை காத்து கொள்ளகூடிய சக்தி வெந்நீர் குளியலுக்கு உண்டு.கருத்தடை சாதனங்கள் வருவதற்கு முன்னர் நைஜீரிய
நாட்டு ஆண்களும் , பெண்களும் உடலுறவிற்கு முன்னால்வெந்நீர் தொட்டியில் குளித்துவிட்டு பிறகு உடலுறவு கொள்வார்கள்இதை ஒரு சிறந்த கருத்தடை முறையாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.சாதாரண மனித உடல் சூடிற்கே நமது உயிரணுக்கள் இறந்து விடும் என்பதால் தான் இயற்கை நமது மனித உடலில் விந்துபையை மட்டும் தனியாக தொங்க விட்டு இருக்கிறது.ஆகையால் யாராவது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெந்நீரில் குளிக்காமல் இருப்பது
விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வழி வகை செய்யும்.உயிரணுக்களின் செயல்பாட்டை கட்டு படுத்துவதன் மூலம் காம உணர்வுகளை கட்டுபடுத்துவதால் வெந்நீர் குளியல் பெண்களால் வரும் பல பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவிக்கின்றது.வள்ளலின் வாழ்வியல் முறைகளில் அடுதவற்றை தொடர்ந்து இதே தலைப்பில் காண்போம்.

2 comments:

  1. i heard that if we wash our utensils in hot water, it will be dazzled. Likely, our uyir paathiram(body) will get many advantages according to sri vallalar. i agree with you.
    a small request/information in this regard. why don't we use solar water heater for this purpose. It is cost effective. 24 hours available. eco friendly. Saves electricity.,etc.,
    warm wishes

    ReplyDelete
  2. if possible, please convey how to post a comment/feedback in tamil thanks

    ReplyDelete